|
|
Saturday, June 19, 2004 5:08 PM Desikan # 2 comments
Like it ? Rate it !
(Click stars to rate) |
வேறொரு மழை நாள் - மனுஷ்ய புத்திரன்நண்பர் ஹமீதிடம் ( கவிஞர் மனுஷ்ய புத்திரன்) என் வலைப்பதிவை பற்றி பேசிக் கொண்டிருந்தேன்."வாரம் ஒரு முறை எழுதுவதற்கு நிறைய படிக்க வேண்டியிருக்கிறது, அதனால் இந்த வாரம் என் வலைப்பதிவில் போடுவதற்கு ஒன்றுமில்லை" "இரண்டு நாள் முன் எழுதிய கவிதை என்னிடம் இருக்கிறது எடுத்துக் கொள்ளுங்கள்" என்றார். "கவிதை பற்றி ஒரு சிறு குறிப்பு கொடுத்தால் என் போன்றவர்கள் உம்மாச்சிக்கு தேங்காய் உடைப்பார்கள்" உடனே ஒரு குறிப்பையும் எழுதி கொடுத்தார். இந்த வாரம் மனுஷ்ய புத்திரனின் 'வேறொரு மழை நாள்' என் வலைப்பதிவில் வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
அவள் சங்கிலியை விடுவித்ததும் அவளை இழுத்துக்கொண்டு வீட்டிற்குள் ஓடிவருகிறது காங்க்ரீட் கூரையிலிருந்து கொட்டும் மழைநீரை வீணாக்க மனமில்லாமல் குடங்களை எடுத்துவைக்கிறாள். குடங்கள் நிரம்பித் தண்ணீர் வழிந்தோடுகிறது போன மழைக்கு ஒழுகிய இடத்தைப் பார்க்கிறாள் இல்லை அதில் எந்தக் கசிவும் இல்லை சாரல் படரத் தொடங்குகிறது ஜன்னல்களை மூடுகிறாள் கண்ணாடியில் மழை பெய்துகொண்டே இருக்கிறது இனி மழையிடம் செய்வதற்கு ஒன்றுமேயில்லை. வாசலில் வந்து நின்று மழையை அதன் முடிவற்ற தனிமையின் வழியே பார்த்துக்கொண்டே நிற்கிறாள் எங்கிருந்தோ ஒரு மெல்லிய சூறைக்காற்று அவளது முகத்தில் காதுகளில் அடிவயிற்றில் எல்லா இடத்திலும் ஈரத்தைக்கொண்டு வருகிறது சட்டென ஏதோ ஒரு காலத்தில் ஒரு வயல் வரப்பில் திடீரென வந்துவிட்ட மழையில் நனைந்தபடி வீட்டிற்கு ஓடும் சிறுமியின் முகமாக மாறுகிறது அவளது முகம் இந்த மழை இப்போதைக்கு நிற்காது என்று யாரோ சொல்கிறார்கள் - மனுஷ்ய புத்திரன் மழை நம்முடைய இறுகிப்போன அன்றாட வாழ்வில் ஒரு குறுக்கீடு. நம் பரபரப்புகளுக்கு இடையே திடீர் மழை ஏற்படுத்தும் செயலின்மைதான் மழை தரும் ஆனந்தங்களிலேயே மிகவும் முக்கியமானது. மழை வந்துவிட்டால் நம்முடைய ஒழுங்குகளை ஏற்பாடுகளை சற்றே உடனடியாக மாற்ற வேண்டியிருக்கிறது. இந்தக் கவிதையில் நிகழ்வது எவ்வாறு மழை அதற்கான செயல்களை தூண்டுகிறது என்பதுதான். ஆனால் கவிதையின் மைய அனுபவம் அதைத் தாண்டியது. இந்த ஏற்பாடுகள் முடிந்தபிறகு திடீரென செய்வதற்கு ஏதுமில்லாமல் மழையும் நாமும் மட்டும் இருக்கிறோம். இப்போது தற்போதைய வாழ்நிலையின் எல்லா இறுக்கங்களும் கலைந்து ஏதோ ஒரு வயல் வெளியில் மழியில் நனைந்தபடி வீடு திரும்பும் சிறுமியாக தன்னை இக்கவிதையின் பாத்திரம் உணர்கிறது. இது தன்னைத் தானே கடக்கும் ஒரு நிலை. வேறொரு மழை நாள் - மனுஷ்ய புத்திரன் பிடிச்சிருக்கா ? பிடித்திருந்தால் '+' பிடிக்காவிட்டால் '-' என்று ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து மற்றவருக்கு படிக்கவோ படிக்காமலிருக்கவோ உதவுங்கள். பரிந்துரைக்க Starsயை கிளிக் பண்ணுங்க..நன்றி! Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as' |
|
|   | ||
| Links: |
Site Feed
|
| தேசிகன் பக்கம்
| பாலாஜி
| Early Days
|
| Powered by: |
|
Who Links Here |
|
| Current | Chronological listing..click here |